Skip to main content

Book Review: Kanavugalin Vilakam

கனவுகளின் விளக்கம்
- சிக்மண்ட் பிராய்ட்



1) கனவு என்றால் என்ன?
2) ஏன் தூக்கத்தில் கனவு வருகிறது?
3) ஏன் விழித்தவுடன் கனவு மறந்து போகிறது?
4) கனவு பலிக்குமா?
5) கனவு என்பது கடவுளின் அருள் வாக்கா?
6) கனவில் எதிர்காலத்தை தெரிந்துக்கொள்ள முடியுமா?
7) பகல் கனவு என்றால் என்ன?
8) காதல் வயப்பட்டவர்களின் கனவில், அவர்கள் காதலிப்பவர்கள் வருவார்களா?
9) பாலுணர்ச்சி சம்பந்தமான கனவுகள் வருவது ஏன்?

மேலும் இதுபோன்று கனவை பற்றிய கேள்விகளுக்கு இந்த புத்தகம்​ எளிமையாக விளக்கம் தருகிறது.

அதுநாள்வரை கனவு என்பது மதம் அல்லது அசரீரி என்ற கோணத்திலே நம்பப்பட்டு வந்தது. அதற்கு விளக்கம் தரும் வகையில் "உளவியலின் தந்தை" என்று போற்றப்படும் மருத்துவரான 'சிக்மண்ட் பிராய்ட்' அவர்கள் 1899ல் வெளியிட்ட புத்தகம் தான் "The Interpretation of Dreams". அதன் தமிழ் சுருக்க வடிவமே இந்த "கனவுகளின் விளக்கம்".

'சிக்மன்ட் பிராய்ட்' அவர்கள் ஒரு நபரின் கனவை பதிவு செய்து, அந்த நபரின் கடந்த காலம், விருப்பு, வெறுப்பு என அனைத்தையும் அலசி ஆராய்ந்து அந்தக் கனவுக்கான விளக்கத்தை தருகிறார்.

இவ்வாறு அவர் பலதரப்பட்ட மக்களின் கனவுகளை பதிவு செய்து, அதில் இருக்கும் ஒற்றுமைகளை கண்டுபிடித்ததன் மூலமாக கனவுகளுக்கு சில கோட்பாடுகளை வகுக்கிறார்.

இதற்காக அவர் எடுத்துக்கொண்ட கனவுகள் பெரும்பாலும் அவரை சந்திக்க வந்த மனநோயாளிகளின் கனவுகளே ஆகும். அந்தக் கோட்பாடுகள் இயல்புநிலை மனிதர்களுக்கும் பொருந்துவது ஆச்சரியமளிக்கிறது.

கனவு என்றுமே பொய் சொல்லாது, கனவிற்கு ஒரு யானையின் ஞாபக சக்தியை விட ஆயிரம் மடங்கு அதிகமாக  இருக்கும் என்ற செய்திகள் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருகிறது. கனவே விழித்தவுடன் மறந்து போகிறது. அப்படி இருக்கையில் கனவிற்கு எப்படி யானையை விட ஆயிரம் மடங்கு அதிகமாக ஞாபகசக்தி இருக்கும் என்ற கேள்வி நிச்சயம் எழும்.
இது போன்ற கேள்விகளுக்கு,
அவர் சான்றுடன் தரும் விளக்கங்கள் மேலும் ஆச்சரியத்தை தருகிறது.

இந்த புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் நம் கனவுகளை நாமே ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு வித்தகராகவும் மாறிவிடலாம். அப்படி நான் இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் நாட்களில் கண்ட ஒரு கனவை பற்றி பார்ப்போம்

கனவு:
ஒரு சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு வெள்ளை chartல் ஒன்றுபட்ட தமிழ் நாட்டு மாநிலத்தின் வரைபடம் கருப்பு நிறத்தில் வரையப்பட்டி இருந்தது.
அதில் திருச்சி இருக்கும் இடத்தில் வேறு ஏதோ ஒரு பெயர் இருந்ததாக நினைவு.

விளக்கம்:
கனவுக்கு முந்தன நாள் YouTubeல் scroll செய்துகொண்டு இருக்கும் போது ஒரு காணொளியின் Thumbnailல் இந்தியாவில் Covid19 நோயால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் infographicயை பார்த்ததாக ஞாபகம்.
எனக்கு வெள்ளைத்தாளில் நீல நிற மை பேனாவால் எழுதுவதைவிட கருப்பு நிற மை பேனாவால் எழுதுவதே பிடிக்கும்.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒருநாள் தமிழ் ஆசிரியர் திருச்சியின் முந்தைய பெயர் "திருசிலாபள்ளி". அதுவே இப்போது திருச்சிராப்பள்ளி என்று மருவியதாக சொன்னார்.

இப்படி நாம் மற்றவர்களின் கனவையும் ஆராய்ந்து பார்க்கலாம். ஆனால் அதற்கு அவர்கள் உண்மையை சொன்னால் மட்டுமே முழுமையான விளக்கத்தை சொல்ல முடியும்.

சில கனவுகள் அர்தமற்றதாகவும் குறியீட்டுடன் வரும். அதற்கான விளக்கத்தையும் 'சிக்மண்ட் பிராய்ட்' தெளிவாக தருகிறார். அதில் சில முரண்பாடுகளும் விதிவிலக்கும் இருக்கிறது என தற்போது அறிவியலாளர்கள் கூறுகின்றனர். மனநோயாளிகளின் கனவுகளில் மூலம் வரையறுத்த முடிவுகளை இயல்புநிலை மனிதர்களுக்கு எப்படி ஒப்பிடுவது என சிலர் இவரின் கோட்பாடுகளை ஏற்க மறுத்தனர்.
"எல்லா கனவுகளுக்கு பாலுணர்வே காரணம்" என்ற கோட்பாட்டையும் அறிவியலாளர்கள் மறுக்கின்றனர்.

இப்படி சில முரண்பாடுகள் இருந்தாலும் கனவை பற்றிய ஆராய்ச்சிக்கு தொடக்க புள்ளியாக அமைந்தது இந்த புத்தகமே.

இந்த புத்தகத்தை பகுதி பகுதியாக இடைவேளை விட்டு  படித்தால் விரைவில் முடித்து விடலாம், புத்தகத்தையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியும். காரணம் இந்த புத்தகம் ஒரு உளவியல் புத்தகத்தை படிப்பது போன்று​ இருப்பதால்.

ஒவ்வொரு முறையும் படித்த பின்பு புத்தகத்தை மூடி வைக்கும்போது "என்ன நான் சொல்வது சரிதானே?", அப்படின்னு அட்டையில் இருக்கும் 'சிக்மண்ட் பிராய்ட்' அவர்கள் நம்மைப் பார்த்து கேட்பது போல் இருக்கிறது.

கனவு என்பது எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்காது, சில நேரங்களில் ஏடாகூடமான கனவுகளும் வரும். அப்படி பாலுணர்வு, நிர்வாணம், காமம் போன்ற கனவுகளை 'சிக்மண்ட் பிராய்ட்' அவர்கள் உயிரியல் ரீதியாக சிறப்பாக விளக்குகிறார். நிச்சயம் பதின் வயது குழந்தைகள் முதல் அனைவரும் படிக்கும் வகையில் இருக்கிறது இந்த புத்தகம். அப்படி இருக்கையில் இந்த புத்தகத்தை 'Books for Children' என்ற வரிசையில் வெளியிடப்பட்டுள்ளது யோசிக்க வைக்கிறது.

இப்படி ஒரு சிறப்பான புத்தகத்தை தமிழில் கொடுத்ததற்காக 'பாரதி புத்தகாலயதையும்' மொழிபெயர்ப்பாளர் 'நாகூர் ரூமி' அவர்களையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

மனிதனின் எண்ணங்களை அவர்கள் காணும் கனவு கண்ணாடி போல காட்டி விடும்.

Dream is the fulfillment of a wish.
- Sigmund Freud





See also:
Story of the Photo - School Memories
https://scienceplusmovies.blogspot.com/2020/04/school-memories.html?m=1

Comments

Popular posts from this blog

Bajii in Different Style

"சமைக்கலாம் வாங்க" 4.0 பஜ்ஜி தேவையான பொருட்கள்: 1) வெங்காயம் - 4 2) உருளைக்கிழங்கு - 2 3) கேரட் -1 4) கொத்தமல்லி ஒரு கொத்து *மிளகாய்த்தூள், உப்பு - ருசிக்கேற்ப செய்முறை: ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், உருளைக்கிழங்கு, துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ஐந்து தேக்கரண்டி கல்ல மாவு, ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், 3/4 தேக்கரண்டி உப்பு, கொஞ்சம் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து கலக்கவும். 15 நிமிடத்திற்கு அப்படியே​ விடவும். காரணம்: வெங்காயத்தில் இருக்கும் தண்ணீர் வெளியேறும். கலவை சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும். கெட்டியாக இருந்தால் தண்ணீரும் தண்ணீயாக இருந்தால் கல்ல மாவையும் சேர்த்து சரியான பததிற்கு கொண்டு வரவும். எண்ணைச் சட்டியில் மசால் வடைக்கு போடுவது போல் தட்டையாக போட்டு பொரித்து எடுத்தால் "4.0 பஜ்ஜி" தயார். குறிப்பு: இந்த கலவையில் தண்ணீரை சேர்க்காமல் பிசைந்து எண்ணையில் உதிர்த்து போட்டால் "பக்கோடா" தயார்.

Movies of 2018 - A Overview

2018ல் நான் பார்த்த திரைப்படங்கள் ஒரு பார்வை. நிமிர் - எதார்த்தமான கதையை அழகான கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்பட்ட மலையாள மறு ஆக்கம். சில காட்சிகள் அழுத்தம் இல்லாமல் நகர்கிறது. படத்தின் நாயகனுக்கும் அவரின் தந்தைக்கும் நடக்கும் காட்சிகள் கவித்துவமானவை. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் - நகைச்சுவை திரைப்படம் என்ற பெயரில் வந்து சிரிப்பை வரவைக்காத திரைப்படம். சவரக்கத்தி - நகைச்சுவை காட்சிக்குள் வாழ்க்கை தத்துவங்களை குறியீடாக வைத்து புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட திரைப்படம். கூட்டாளி - பணம் செலுத்தாதவர்களின் வண்டிகளை திருடும் நான்கு நண்பர்களைப் பற்றிய கதை. சுமாராக எடுக்கப்பட்ட சிறு பட்ஜெட் திரைப்படம். படத்தின் கடைசி 30 நிமிடங்கள் அருமை. நடிகையர் திலகம் - சாவித்திரி என்ற மகா நடிகையின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம். சமந்தா காட்சி பகுதிகளை தாராளமாக குறைத்திருக்கலாம். சாவித்திரி அவர்களை எண்ணி பிரமிப்பும் வருத்தமும் ஏற்ப்படுத்தி படம். இரும்புத் திரை - Cyber​ crime மற்றும் தொழில்நுட்ப வழி தகவல் திருட்டுகளை எளிதாக விளங்கிய படம். மக்கள் எந்த அளவுக்கு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பய

NTR Kathanayagudu - Movie Review

NTR கதாநாயக்டு - ஒரு பார்வை குறிப்பு: இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகியிருக்கிறது. ஆங்கில துணைத் தலைப்புகளும் இல்லை. இருந்தாலும் இது ஒரு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் என்பதாலும் திரைப்பட அனுபவத்திற்காகவும் பார்த்தேன். கதை: "நந்தமுரி தாரக ராமா ராவ்" எப்படி மக்கள் போற்றும்​ திரைக் கலைஞனாக உருவாகுகிறார் என்பதே "NTR கதாநாயக்டு". NTRஆக அவரது புதல்வரும் நடிகருமான பாலகிருஷ்ணா நடித்திருக்கிறார். தன்னுடைய ஆத்மார்த்தமான நடிப்பை தந்திருக்கிறார். வித்தியா பாலன் NTRரின் மனைவியாக அமைதியாக வந்து போகிறார். இவர்களைத் தவிர ஏகப்பட்ட நடிகர்கள் வந்து செல்கின்றனர். படத்தின் கலை வேலைகள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக பழைய காலத்தில் பயன் படுத்திய சினிமா படப்பிடிப்பு இடங்கள், படத்தொகுப்பு செய்யும் இயந்திரம், படச்சுருள் என நம்மை கால பயணம் செய்ய வைத்திருக்கிறார்கள். "பெரிய நடிகர் ஆன பின்னரும் தன் பழைய நண்பர்களை சந்தித்து பட வாய்ப்பு தருவது, மக்களின் துயரங்களை கண்டு வருந்துவது, ஒரு குடிசை வீட்டில் பூஜை அறையில் தன்னுடைய கிருஷ்ணர் வேசம் படத்தை கண்டு NTR நெகிழ்வது" போன்ற

Renugambal Temple, Padavedu.

ரேணுகாம்பாள் கோயில், படவேடு. திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் பேருந்தில் ஏறி "சந்தவாசல்" நிறுத்தத்தில் இறங்க வேண்டும். பயண நேரம் - ஒரு மணி நேரம். அங்கிருந்து பங்கு ஆட்டோ (share auto) மூலம் கோயிலை அடையலாம். பயண நேரம் - 15 நிமிடங்கள். படவேட்டில் ரேணுகாம்பாள் கோயிலை தவிர பல கோயில்கள் இருக்கிறது. Car அல்லது Bikeல் செல்பவர்கள் முக்கியமான அனைத்து கோயில்களையும் எளிதில் பார்த்து விடலாம். பேருந்தில் சென்றவர்கள் ரேணுகாம்பாள் கோயிலை பார்த்து விட்டு, கோயிலுக்கு அருகில் இருக்கும் ஆட்டோவை வாடகைக்கு எடுப்பது சிறந்த வழியாகும். அனைத்து கோயில்களையும் பார்க்க தோராயமாக இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் ஆகும். படவேட்டை சுற்றிப்பார்க்க சிறந்த நேரம்: காலை - 8 மணி முதல் 12 மணி வரை மாலை - 3 மணி முதல் 6.30 வரை விசாரித்த வகையில் நான் பார்க்கத் தவர விட்ட முக்கியமான இடங்கள்: 1) லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். 2) அம

இண்டிபெண்டண்ட் சினிமா - புத்தக விமர்சனம்

பலரின் சினிமா பார்வையையும் தேடலையும் தங்களின் காணொளிகளின் மூலம் விரிவடைய காரணமாக இருந்து வரும் "Missed Movies" YouTube சேனலிடம் இருந்து வெளிவந்திருக்கும் புத்தகமே "இன்டிபெண்டண்ட் சினிமா". தயாரிப்பாளரை மட்டுமே சார்ந்து இருக்காமல் படைப்பாளியின் கையில் இருக்கும் பொருளாதாரம் மற்றும் நண்பர்கள், தெரிந்தவர்களின் பண உதவியுடன் எடுக்கப்படும் சினிமாவே இன்டிபெண்டண்ட் சினிமா (சுயாதீன திரைப்படம்). இயக்குனரிடம் தயாரிப்பாளர் கதையில் செய்யச் சொல்லும் ஜனரஞ்சக மற்றும் வணிக மாற்றங்களே இதற்கு காரணம். இந்த புத்தகம் சுயாதீன திரைப்படத்தின் தொடக்க காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை எப்படி இயங்கி வருகிறது என ஒரு தகவல் களஞ்சியமாக இருக்கிறது. உலக சினிமா ஏன் பார்க்க வேண்டும்? என்ற விளக்கத்துடன் ஆரம்பமாகிறது இந்த புத்தகம். பிறகு சுயாதீன திரைப்படம் தொடங்கிய காலம், அதை முன்னெடுத்த இயக்குனர்கள் என நாம் இதுவரை அறிந்திராத தகவல் மற்றும் சம்பவங்களுடன் நகர்கிறது. கிட்டத்தட்ட சினிமா உலகில் நமக்கு மறைக்கப்பட்ட வரலாற்றை பிரம்பிப்புடன் படிப்பது போன்றதொரு உணர்வு. இந்த புத்தகத்தின் எழுத்

பறவை குறும்படத்தின் Storyboard

பறவை குறும்படம் https://youtu.be/skfi6l3QLFY

மொட்டை மாடி தீபாவளி!

  இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே தெருக்களில் "அகலு! அகலேய்....!" என  வியாபாரிகளின் கூக்குரல், கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி விட்டத்தை சொல்லும் அறிகுறிகளின் ஒன்று. பத்து நாட்கள் நடைபெறும் எங்கள் ஊர் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் மரத்தேரும், பத்தாம் நாள் தீபத் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஐந்தாம் திருவிழாவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும். முதல் திருவிழாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக திருவிழா கலைக் கட்ட ஆரம்பிக்கும். மரத்தேரின் போது திருவிழா அதன் உச்ச நிலையை​ தொட்டு இருக்கும். உள்ளூரில் இருந்து வெளியூர்களுக்கு சென்றவர்கள் தங்கள் சொந்த வீட்டிற்கும் அல்லது சொந்தங்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்திருப்பார்கள். ஒன்பதாம் திருவிழாவன்று பல ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதற்கான சிறப்பு பேருந்துகளை இயக்க ஆரம்பித்து இருப்பார்கள். விடுமுறை கிடைக்காத திருவண்ணாமலை வாசிகள் எப்படியாவது தீபத்தை மட்டுமாவது பார்த்து விடவேண்டும் என அடித்து பிடித்து ஊரை நோக்கி தங்களின் பயணத்தை தொடங்கி இருப்பார்கள். தொலைக்காட்சியில் எல்லா சேனலில்கள

Vettavalam Village - A Photo Collection

Bazaar Street                               Vinoth Theatre Jameen Palace Singaara Kulam Manonmaniyamman Temple Aerial View - Vettavalam                          Anchineeyar Temple                      Agastheeswarar Temple Varatharaaja Perumal Temple Play Time - Goli Gundu St. Mary's Sacred Heart Chruch Black and White Hut Village WhatsApp Group Thallaakulam Market

Naveram - Short Story.

நவிரம் - சிறுகதை.       சீரான இடைவெளியில் மண்ணில் பாதி புதைந்திருந்த ரப்பர் டயர்களின் மீது மழலைகள் தாவியாடிக் கொண்டிருந்தார்கள். தொங்கும் கயிறு பாலம், மரப்பாலம், லாரி டயரினால் செய்யப்பட்ட குகை என பல வித்தியாசமான விளையாட்டுகளும்; ஊஞ்சல், சறுக்கு மரம், இரும்புக் கூண்டு, சீ-சா போன்ற வழக்கமான விளையாட்டுகளும் இருந்தது. பல வண்ணங்களில் தீட்டப்பட்டு இருந்த அனைத்து விளையாட்டுகளிலும், குழந்தைகள் ஆக்கிரமிப்பு செய்து இருந்தார்கள். அவர்களை தங்களின் கண் பார்வையிலேயே இருக்கும்படி பெற்றோர்கள் அருகிலேயே நின்று கவனித்துக் கொண்டார்கள். மழைநீர் சேகரிப்பு, மக்கும்-மக்காத குப்பை, டெங்கு ஒழிப்பு, நடைப் பயிற்சியின் பயன்கள், மனிதன் நிலவில் கால் பதித்த காட்சி, சூரியக் குடும்பம், கிரகணங்கள், மயில் வடிவில் இருக்கும் மாவட்டத்தின் வரைபடம் என பலப் படங்கள் பூங்காவின் சுற்று சுவர் முழுவதும் ஓவியமாக வரையப்பட்டு இருந்தது. ஆங்காங்கே போடப்பட்டு இருந்த சிமெண்ட் பெஞ்ச் அனைத்திலும் ஆட்கள் நிரம்பி இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பிள்ளைகளுடன் வந்தவர்களாகவும் சிலர் வேடிக்கை பார்த்து பொழுதை போக்க வந்தவர்களாகவும் இருந்தார்

Story of the Photo 03: Samosa Men of Tiruvannamalai

சமோசா பாயும் பையாவும்      தேரடி வீதியில் TVS XLலில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது எனது வலது புறத்திற்கு எதிரே கொஞ்சம் தூரத்தில் இவர் வந்து கொண்டிருந்தார். சிறுவயதில் இருந்து பார்த்து. வருகிறேன் சட்டென ஒரு யோசனை, இவரை ஏன் ஒரு புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தோன்றியது. உடனே வண்டியை இடது பக்கம் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, வண்டிக்கு பூட்டு போட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு சாலையை கடந்தேன். புகைப்படம்  எடுப்பதை அவர் பார்த்து விட்டால் ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று தயங்கினேன். அதனால் பின் பக்கமாக இருந்து எடுக்கத் திட்டமிட்டேன். அவருக்குப் பின்னால் மூன்றடி இடைவெளி விட்டு பின்தொடர செய்ய ஆரம்பித்தேன். வேகமாக போனை அன்லாக் செய்து கேமராவை ஆன் செய்து பிரேமை வைத்தேன். அதே மூன்றடி  இடைவெளியுடன் அவரின் வேகத்திற்கு இணையாக நடந்துகொண்டே ஒரு படம் எடுத்தேன். எடுக்கும்போதே தெரிந்தது, படம் சிறப்பாக அமையவில்லை. அடுத்த படத்திற்கு முயற்சி செய்து கொண்டிருந்த​ நொடி அவர் பூம்புகார் துணியகத்தை கடந்துக்கொண்டு இருந்தார். அந்நேரம் கடையில் இருந்து  தாய்மார்கள் இருவர் வெளியே வந்துகொண்டு இருந்தனர். அவர்களில் ஒரு