Skip to main content

மொட்டை மாடி தீபாவளி!

 


இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே தெருக்களில் "அகலு! அகலேய்....!" என  வியாபாரிகளின் கூக்குரல், கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி விட்டத்தை சொல்லும் அறிகுறிகளின் ஒன்று. பத்து நாட்கள் நடைபெறும் எங்கள் ஊர் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் மரத்தேரும், பத்தாம் நாள் தீபத் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஐந்தாம் திருவிழாவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும். முதல் திருவிழாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக திருவிழா கலைக் கட்ட ஆரம்பிக்கும். மரத்தேரின் போது திருவிழா அதன் உச்ச நிலையை​ தொட்டு இருக்கும். உள்ளூரில் இருந்து வெளியூர்களுக்கு சென்றவர்கள் தங்கள் சொந்த வீட்டிற்கும் அல்லது சொந்தங்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்திருப்பார்கள்.

ஒன்பதாம் திருவிழாவன்று பல ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதற்கான சிறப்பு பேருந்துகளை இயக்க ஆரம்பித்து இருப்பார்கள். விடுமுறை கிடைக்காத திருவண்ணாமலை வாசிகள் எப்படியாவது தீபத்தை மட்டுமாவது பார்த்து விடவேண்டும் என அடித்து பிடித்து ஊரை நோக்கி தங்களின் பயணத்தை தொடங்கி இருப்பார்கள். தொலைக்காட்சியில் எல்லா சேனலில்களிலும் தீபத் திருவிழாவின் நேரலை குறித்த விளம்பரம் அப்பப்ப வந்துக் கொண்டு இருக்கும். பெரும்பாலான எல்லா விளம்பரங்களிலும் "எஸ். பி. பாலசுப்ரமணியம்" அவர்களின் "ஹர ஹர சிவனே..." பாடலே பின்னணியில் ஓடும். விளம்பரத்தின் இறுதியில் "திருவண்ணாமலை....திருக்காரத்திகை.... தீபத் திருவிழா.... நேரடி ஒளிப்பரப்பு.... காணத்தவறாதீர்கள்...." எனக் கனமான குரல் ஒன்று வார்த்தைகளை இழுத்து உச்சரித்துக் கொண்டு இருக்கும்.

எப்படி தீபாவளிக்கு 'குலோப் ஜாமுன் மிக்சை' அடிக்கி வைப்பார்களோ அதேபோல் தீப எண்ணெய் பாட்டிலை அனைத்து மளிகை மற்றும் பல்பொருள் அங்காடிகளும் அடிக்கி வைத்திருப்பார்கள்.

விடியற்காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல ஆரம்பித்து இருப்பார்கள். நேரம் செல்ல செல்ல வெளியூரிலிருந்து வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை​ நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வை தொலைக்காட்சி செய்தியின் மூலம் மக்கள் அனைவரும் பார்த்து மகிழ்வார்கள். அப்பொழுது இருந்தே மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலையின் மீது 6 அடி கொப்பரையில் ஏற்றப்படும் தீபத்தின் மீதான எதிர்பார்ப்பும் ஆர்வமும் ஆரம்பித்துவிடும்.

14 கிலோமீட்டர் கிரிவலம் செல்ல இயலாதவர்கள் மாடவீதியை மட்டும் சுற்றி வந்து விடுவார்கள்.

சென்ற வருடம் பயன்படுத்திய அகல் விளக்குகளை எடுத்துக் கழுவி வெயிலில் காய வைப்பது, பூஜை பொருட்களை கழுவுவது என சுத்தப்படுத்தும் செயல் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும்.

தீபாவளியின் போதே "இது தீபத்துக்கு" என பிரித்து எடுத்து வைக்கப்பட்ட பட்டாசுகளை பரணையில் இருந்து எடுத்து வெயிலில் காய வைப்பார்கள்.

வெளியூரில் இருந்தும்​ வெளி மாநிலத்தில் இருந்தும் கார்களில் வருபவர்கள் தங்கள் கார்களை அரசு ஏற்பாடு செய்த நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு ஊருக்குள் வருவார்கள். சிலர் ஊருக்குள் கார்களை எடுத்து வந்து நெரிசலை ஏற்படுத்தி செய்வது  அறியாமல் தவிப்பார்கள்.  பேருந்துகளிலில் வருபவர்களை ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருக்கும் தற்காலிக பேருந்து நிலையத்திலேயே இறக்கி விடப்படுவார்கள். இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு பெரிதாக தடை ஏதும் இல்லை. அவர்கள் ஊரில் உள்ள தெருக்களில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் வண்டிகளை நிறுத்தி விட்டு கிரிவலம் செல்ல ஆரம்பித்து விடுவார்கள். அப்படி அவர்கள் வண்டிகளை விடும் தெருக்கள் அனைத்தும் திரையரங்க பார்க்கிங்யை நினைவுபடுத்தும்.

"அக்கா கற்பூரம் வாங்கிங்க! அண்ணா கற்பூரம் வாங்கிங்க! அம்மா கற்பூரம் வாங்கிங்க! ஐயா கற்பூரம் வாங்கிங்க!" என ஒரு தட்டில் கற்பூரங்களை வைத்துக் கொண்டு 5 வயது முதல் 80 வயது வரையிலான பல தரப்பட்ட கற்பூர வியாபாரிகளின் குரல்கள் பிரதான சாலை முழுவதும் ஒலிக்கும். கிரிவலம் செல்லும் பக்தர்களை வாங்கச் சொல்லி கேட்டுக் கொண்டிருப்பார்கள். "ரோட்டுக்கு ஓரமா நின்னு வியாபாரம் பண்ணுங்க, எதுக்கு நடுவுல வந்து நின்னு தொந்தரவு செய்யுறீங்கன்னு" அவர்களில் சிலர் காவல்துறையினரிடம் இருந்து திட்டும் வாங்குவார்கள்.
கிரிவலம் செல்லும் சாலையில் கடை வைத்து இருப்பவர்கள் தங்கள் வழக்கமான தொழிலை ஓரங்கட்டிவிட்டு "தேநீர் கடை, இட்லி கடை, லெமன் சோடா, தண்ணீர் பாட்டில், காலணி/லகேஞ் பாதுகாப்பு நிலையம்" போன்ற​ தொழிலில் இறங்கி இருப்பார்கள். அந்த ஒரு இரவு கண் விழித்து வியாபாரம் செய்தால் அவர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள்.

அக்கம் பக்கத்து வீட்டில் இருந்து வழக்கமாக கேட்கும் குரல்களை தாண்டி வேறு சில புதிய குரல்களையும் கேட்க முடியும். அவர்கள் வெளியூரிலிருந்து வந்த சொந்தங்கள் ஆக இருப்பார்கள்.

மாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கெல்லாம் அகல் விளக்குகளை தயார் செய்ய அனைவரும் ஆரம்பித்து விடுவார்கள். ஒரு செம்பருத்தி இலையில் எலுமிச்சம்பழம் அளவுக்கு மாட்டு சாணத்தை உருட்டி வைத்து அதன் மீது அகல் விளக்கை வைத்து அழுத்துவார்கள். அதன் பிறகு எண்ணெய் ஊற்றி திரிசல்  போட்டு தயார் செய்வார்கள். ஆனால் இப்போது பெரும்பாலும் வெறும் அகல்விளக்கை வைப்பதை மட்டுமே பார்க்க முடிகிறது. மணி 5:30யை நெருங்கியதும் விளக்குகளை ஏற்றி வீட்டின் வாசல், சுற்றுச்சுவர், மாடியின் சுற்றுச்சுவரில் வைத்து வீட்டடையே அலங்கரிப்பார்கள். அந்த அகல் விளக்குகளின் எண்ணிக்கை ஒற்றை படையில் இருக்குமாறு  தாய்மார்கள் கவனமாக பார்த்துக் கொள்வார்கள்.

அதுநாள் வரையில்  மாவட்ட செய்தி பிரிவில் வந்து கொண்டிருந்த எங்கள் ஊர் அந்த நொடி முதல் நேரலையில் உலகம் முழுவதும் பார்க்கப்படும் பிரதான செய்தியாக மாறி இருக்கும். "நம்ம ஊரை டிவில காட்றாங்க!" என மக்கள் அனைவருக்குள்ளேயும் கொஞ்சம் கெத்தான உணர்வு இருக்கும். ஒவ்வொரு தொலைக்காட்சியின் நேரலையிலும் ஆன்மீகம் சார்ந்த ஒருவர் அண்ணாமலையார் கோயிலின் வரலாறையும் ஆன்மீக கதைகளையும் மக்களுக்கு சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

5:45 மணிக்கெல்லாம் எல்லாரும் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் பூஜைப் பொருட்களுடன் அண்ணாமலையாரை தரிசிக்க காத்துக் கொண்டிருப்பார்கள்.

கிரிவலம் சென்று கொண்டிருந்தவர்கள் அங்காங்கே ஓரமாக மலையை நோக்கி நின்று கொண்டிருப்பார்கள். அனைவரும் அந்த அழகிய தருணத்திற்காக மிகவும் பரவசத்துடன் மலை உச்சியை பார்த்துக் கொண்டிருப்பார்கள். கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண காத்துக்கொண்டு இருப்பது போல் ஒட்டுமொத்த மக்களின் பார்வையும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும்.

ஆறு மணி ஆனதும் மலையின் மீது இருந்து முதலில் லேசாக ஊதுபத்தியில் இருந்து வருவது போல் கரும்புகையும் அதனை தொடர்ந்து தீப ஒளியும் மக்களின் காட்சிக்கு தெரிய ஆரம்பிக்கும். அந்த நொடியில் மக்கள் அனைவரும் "அண்ணாமலைக்கு அரோகரா!" என கோசம் இட்டு தரிசனம் செய்வார்கள். ஒரு சிறிய பொட்டு போல தெரியும் அந்த தீப வெளிச்சத்தை அண்ணாமலையாரே காட்சி தருவதாக நினைத்து மக்கள் பிரார்த்தனையும் செய்வார்கள். தாங்கள் எடுத்து வந்த பூஜை பொருட்களைக் கொண்டு தீபாராதனை செய்வார்கள். கூடவே ஊர் முழுவதும் மணி ஓசையும் ஒருசேர ஒலிக்கும். அதே நேரத்தில் பட்டாசும் ராக்கெட்டுகளும் விண்ணை பிளக்க ஆரம்பித்திருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது ஒரு வீட்டிலாவது அவுட் எனச் சொல்லப்படும் ராக்கெட் வெடிகளை வெடிக்க வைத்திருப்பார்கள். அவை அனைத்தும் வானத்தில் வர்ணஜாலம் நிகழ்த்திக் கொண்டிருக்கும். அவரவர்கள் தங்கள் வீட்டின் மாடியில் சரவெடி, பூஸ்வானம், மத்தாப்பு போன்றவற்றை கொளுத்தி மகிழ்வார்கள். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இந்த குட்டி தீபாவளி தொடர்ந்துக் கொண்டு இருக்கும். 

ஊரே மொட்டை மாடியில் நின்று அண்ணாமலையாரை தரிசிக்கும்போது தங்கள் வீடு மட்டும் இன்னும் ஓட்டு வீடாகவும் குடிசை வீடாகவும் இருப்பதை எண்ணி சிலர் வருத்தப்படுவார்கள். சிலர் மொட்டை மாடி வீடு இருந்தும் அருகாமையில் இருக்கும் வீடுகளின் உயரத்தால் தீபத்தை தரிசிக்க முடியாமலும் வருத்தப்படுவார்கள். அவர்கள் தெருவில் நின்றோ அல்லது தெரிந்தவர்கள் வீட்டிற்கு சென்று தீபத்தை தரிசிப்பார்கள்.

வீட்டில் தீபத்தை ஏற்றி விட்டு  சொந்த பந்தகளுடனோ அல்லது தங்கள் நட்பு வட்டாரத்துடன் மக்கள் கிரிவலம் செல்ல ஆரம்பிப்பார்கள். சிலர் காலையிலேயே சென்று வந்து இருப்பார்கள்.

இருள் சூழ சூழ வீட்டில் ஏற்றப்பட்டிருக்கும் அகல் விளக்கின் வெளிச்சம் ஊரில் உள்ள அனைத்து வீட்டிற்கும் மஞ்சள் வண்ண சீரியல் பல்பு போட்டது போல இருக்கும். மறுநாள் வரையில் திருவண்ணாமலை தீபமே அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளிலும் தலைப்பு செய்தியாக இருக்கும். எத்தனை லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றார்கள்? மேலும் திருச்சி உச்சி பிள்ளையார் கோயில் தீபம், திருப்பரங்குன்றம் கோயில் தீபம் போன்ற கூடுதல் செய்திகளும் காணக்கிடைக்கும்.

சில வருடம் மழையின் காரணமாகவோ அல்லது  கடுமையான பனி மற்றும் மேகமூட்டத்தால் மலையின் மீது ஏற்றப்படும் தீபத்தை தரிசிக்க முடியாமலும் போகும். 

இப்படி வருடா வருடம் கொண்டாடப்படும் தீபத் திருவிழாவானது இந்த வருடம் கொரோன நோய்த்தொற்று காரணமாக திருவிழாவின் பிரதான நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டது. அதனால் இந்தாண்டு திருவிழா நாட்கள் முழுவதும் திருவண்ணாமலை மக்கள் அனைவருக்கும் ஏதோ ஒன்றை இழந்தது போல இருந்துவந்தது.

மாட வீதியில் உலா வரும் சாமி விழாவிற்கு தடை, முக்கிய நிகழ்வான மரத்தேர் மற்றும் கிரிவலம் செல்லத் தடை போன்ற உத்தரவுகளால் இந்த திருவிழா நாட்கள் அனைத்தும் சாதாரண நாட்களை போலவே நகர்ந்து சென்றது. எல்லா திருவிழாவிற்கும் காலையிலும் இரவிலும் மாடவீதியில் வெவ்வேறு வாகனங்களில் காட்சி தரும் கடவுள்களை சென்று தரிசித்து வந்த பழக்கத்தின் காரணமாக இந்த வருடம் மக்கள்  தினமும் மாட வீதியை மட்டும் சுற்றி வந்து பிராத்தனை செய்துக்கொண்டார்கள்.

இப்படி தீபத் திருவிழா என்னவோ போல இருந்த காரணத்தினால் திருவண்ணாமலை மக்களை திருப்தி அடைய செய்யப் போகும் ஒரே நிகழ்வு இன்று மாலை ஆறு மணிக்கு ஏற்படும் தீபத்தை தரிசிப்பது மட்டுமே. 

அடுத்த தீபத்தன்று எந்த துயரங்களும் இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே மக்களின் பிரதான வேண்டுதலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மக்களின் பிராத்தனை நிச்சயம் நிறைவேறும் என நம்புவோம்.


Tiruvannamalai Deepam Festival 2019 Photo Collections: ⬇️👇

Festival 2018 Photo Collections:

http://scienceplusmovies.blogspot.com/2018/11/tiruvannamalai-festival-2018_20.html?m=1

Comments

Popular posts from this blog

Bajii in Different Style

"சமைக்கலாம் வாங்க" 4.0 பஜ்ஜி தேவையான பொருட்கள்: 1) வெங்காயம் - 4 2) உருளைக்கிழங்கு - 2 3) கேரட் -1 4) கொத்தமல்லி ஒரு கொத்து *மிளகாய்த்தூள், உப்பு - ருசிக்கேற்ப செய்முறை: ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், உருளைக்கிழங்கு, துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ஐந்து தேக்கரண்டி கல்ல மாவு, ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், 3/4 தேக்கரண்டி உப்பு, கொஞ்சம் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து கலக்கவும். 15 நிமிடத்திற்கு அப்படியே​ விடவும். காரணம்: வெங்காயத்தில் இருக்கும் தண்ணீர் வெளியேறும். கலவை சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும். கெட்டியாக இருந்தால் தண்ணீரும் தண்ணீயாக இருந்தால் கல்ல மாவையும் சேர்த்து சரியான பததிற்கு கொண்டு வரவும். எண்ணைச் சட்டியில் மசால் வடைக்கு போடுவது போல் தட்டையாக போட்டு பொரித்து எடுத்தால் "4.0 பஜ்ஜி" தயார். குறிப்பு: இந்த கலவையில் தண்ணீரை சேர்க்காமல் பிசைந்து எண்ணையில் உதிர்த்து போட்டால் "பக்கோடா" தயார்.

Movies of 2018 - A Overview

2018ல் நான் பார்த்த திரைப்படங்கள் ஒரு பார்வை. நிமிர் - எதார்த்தமான கதையை அழகான கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்பட்ட மலையாள மறு ஆக்கம். சில காட்சிகள் அழுத்தம் இல்லாமல் நகர்கிறது. படத்தின் நாயகனுக்கும் அவரின் தந்தைக்கும் நடக்கும் காட்சிகள் கவித்துவமானவை. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் - நகைச்சுவை திரைப்படம் என்ற பெயரில் வந்து சிரிப்பை வரவைக்காத திரைப்படம். சவரக்கத்தி - நகைச்சுவை காட்சிக்குள் வாழ்க்கை தத்துவங்களை குறியீடாக வைத்து புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட திரைப்படம். கூட்டாளி - பணம் செலுத்தாதவர்களின் வண்டிகளை திருடும் நான்கு நண்பர்களைப் பற்றிய கதை. சுமாராக எடுக்கப்பட்ட சிறு பட்ஜெட் திரைப்படம். படத்தின் கடைசி 30 நிமிடங்கள் அருமை. நடிகையர் திலகம் - சாவித்திரி என்ற மகா நடிகையின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம். சமந்தா காட்சி பகுதிகளை தாராளமாக குறைத்திருக்கலாம். சாவித்திரி அவர்களை எண்ணி பிரமிப்பும் வருத்தமும் ஏற்ப்படுத்தி படம். இரும்புத் திரை - Cyber​ crime மற்றும் தொழில்நுட்ப வழி தகவல் திருட்டுகளை எளிதாக விளங்கிய படம். மக்கள் எந்த அளவுக்கு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பய

NTR Kathanayagudu - Movie Review

NTR கதாநாயக்டு - ஒரு பார்வை குறிப்பு: இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகியிருக்கிறது. ஆங்கில துணைத் தலைப்புகளும் இல்லை. இருந்தாலும் இது ஒரு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் என்பதாலும் திரைப்பட அனுபவத்திற்காகவும் பார்த்தேன். கதை: "நந்தமுரி தாரக ராமா ராவ்" எப்படி மக்கள் போற்றும்​ திரைக் கலைஞனாக உருவாகுகிறார் என்பதே "NTR கதாநாயக்டு". NTRஆக அவரது புதல்வரும் நடிகருமான பாலகிருஷ்ணா நடித்திருக்கிறார். தன்னுடைய ஆத்மார்த்தமான நடிப்பை தந்திருக்கிறார். வித்தியா பாலன் NTRரின் மனைவியாக அமைதியாக வந்து போகிறார். இவர்களைத் தவிர ஏகப்பட்ட நடிகர்கள் வந்து செல்கின்றனர். படத்தின் கலை வேலைகள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக பழைய காலத்தில் பயன் படுத்திய சினிமா படப்பிடிப்பு இடங்கள், படத்தொகுப்பு செய்யும் இயந்திரம், படச்சுருள் என நம்மை கால பயணம் செய்ய வைத்திருக்கிறார்கள். "பெரிய நடிகர் ஆன பின்னரும் தன் பழைய நண்பர்களை சந்தித்து பட வாய்ப்பு தருவது, மக்களின் துயரங்களை கண்டு வருந்துவது, ஒரு குடிசை வீட்டில் பூஜை அறையில் தன்னுடைய கிருஷ்ணர் வேசம் படத்தை கண்டு NTR நெகிழ்வது" போன்ற

Renugambal Temple, Padavedu.

ரேணுகாம்பாள் கோயில், படவேடு. திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் பேருந்தில் ஏறி "சந்தவாசல்" நிறுத்தத்தில் இறங்க வேண்டும். பயண நேரம் - ஒரு மணி நேரம். அங்கிருந்து பங்கு ஆட்டோ (share auto) மூலம் கோயிலை அடையலாம். பயண நேரம் - 15 நிமிடங்கள். படவேட்டில் ரேணுகாம்பாள் கோயிலை தவிர பல கோயில்கள் இருக்கிறது. Car அல்லது Bikeல் செல்பவர்கள் முக்கியமான அனைத்து கோயில்களையும் எளிதில் பார்த்து விடலாம். பேருந்தில் சென்றவர்கள் ரேணுகாம்பாள் கோயிலை பார்த்து விட்டு, கோயிலுக்கு அருகில் இருக்கும் ஆட்டோவை வாடகைக்கு எடுப்பது சிறந்த வழியாகும். அனைத்து கோயில்களையும் பார்க்க தோராயமாக இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் ஆகும். படவேட்டை சுற்றிப்பார்க்க சிறந்த நேரம்: காலை - 8 மணி முதல் 12 மணி வரை மாலை - 3 மணி முதல் 6.30 வரை விசாரித்த வகையில் நான் பார்க்கத் தவர விட்ட முக்கியமான இடங்கள்: 1) லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். 2) அம

இண்டிபெண்டண்ட் சினிமா - புத்தக விமர்சனம்

பலரின் சினிமா பார்வையையும் தேடலையும் தங்களின் காணொளிகளின் மூலம் விரிவடைய காரணமாக இருந்து வரும் "Missed Movies" YouTube சேனலிடம் இருந்து வெளிவந்திருக்கும் புத்தகமே "இன்டிபெண்டண்ட் சினிமா". தயாரிப்பாளரை மட்டுமே சார்ந்து இருக்காமல் படைப்பாளியின் கையில் இருக்கும் பொருளாதாரம் மற்றும் நண்பர்கள், தெரிந்தவர்களின் பண உதவியுடன் எடுக்கப்படும் சினிமாவே இன்டிபெண்டண்ட் சினிமா (சுயாதீன திரைப்படம்). இயக்குனரிடம் தயாரிப்பாளர் கதையில் செய்யச் சொல்லும் ஜனரஞ்சக மற்றும் வணிக மாற்றங்களே இதற்கு காரணம். இந்த புத்தகம் சுயாதீன திரைப்படத்தின் தொடக்க காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை எப்படி இயங்கி வருகிறது என ஒரு தகவல் களஞ்சியமாக இருக்கிறது. உலக சினிமா ஏன் பார்க்க வேண்டும்? என்ற விளக்கத்துடன் ஆரம்பமாகிறது இந்த புத்தகம். பிறகு சுயாதீன திரைப்படம் தொடங்கிய காலம், அதை முன்னெடுத்த இயக்குனர்கள் என நாம் இதுவரை அறிந்திராத தகவல் மற்றும் சம்பவங்களுடன் நகர்கிறது. கிட்டத்தட்ட சினிமா உலகில் நமக்கு மறைக்கப்பட்ட வரலாற்றை பிரம்பிப்புடன் படிப்பது போன்றதொரு உணர்வு. இந்த புத்தகத்தின் எழுத்

பறவை குறும்படத்தின் Storyboard

பறவை குறும்படம் https://youtu.be/skfi6l3QLFY

Vettavalam Village - A Photo Collection

Bazaar Street                               Vinoth Theatre Jameen Palace Singaara Kulam Manonmaniyamman Temple Aerial View - Vettavalam                          Anchineeyar Temple                      Agastheeswarar Temple Varatharaaja Perumal Temple Play Time - Goli Gundu St. Mary's Sacred Heart Chruch Black and White Hut Village WhatsApp Group Thallaakulam Market

Naveram - Short Story.

நவிரம் - சிறுகதை.       சீரான இடைவெளியில் மண்ணில் பாதி புதைந்திருந்த ரப்பர் டயர்களின் மீது மழலைகள் தாவியாடிக் கொண்டிருந்தார்கள். தொங்கும் கயிறு பாலம், மரப்பாலம், லாரி டயரினால் செய்யப்பட்ட குகை என பல வித்தியாசமான விளையாட்டுகளும்; ஊஞ்சல், சறுக்கு மரம், இரும்புக் கூண்டு, சீ-சா போன்ற வழக்கமான விளையாட்டுகளும் இருந்தது. பல வண்ணங்களில் தீட்டப்பட்டு இருந்த அனைத்து விளையாட்டுகளிலும், குழந்தைகள் ஆக்கிரமிப்பு செய்து இருந்தார்கள். அவர்களை தங்களின் கண் பார்வையிலேயே இருக்கும்படி பெற்றோர்கள் அருகிலேயே நின்று கவனித்துக் கொண்டார்கள். மழைநீர் சேகரிப்பு, மக்கும்-மக்காத குப்பை, டெங்கு ஒழிப்பு, நடைப் பயிற்சியின் பயன்கள், மனிதன் நிலவில் கால் பதித்த காட்சி, சூரியக் குடும்பம், கிரகணங்கள், மயில் வடிவில் இருக்கும் மாவட்டத்தின் வரைபடம் என பலப் படங்கள் பூங்காவின் சுற்று சுவர் முழுவதும் ஓவியமாக வரையப்பட்டு இருந்தது. ஆங்காங்கே போடப்பட்டு இருந்த சிமெண்ட் பெஞ்ச் அனைத்திலும் ஆட்கள் நிரம்பி இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பிள்ளைகளுடன் வந்தவர்களாகவும் சிலர் வேடிக்கை பார்த்து பொழுதை போக்க வந்தவர்களாகவும் இருந்தார்

Story of the Photo 03: Samosa Men of Tiruvannamalai

சமோசா பாயும் பையாவும்      தேரடி வீதியில் TVS XLலில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது எனது வலது புறத்திற்கு எதிரே கொஞ்சம் தூரத்தில் இவர் வந்து கொண்டிருந்தார். சிறுவயதில் இருந்து பார்த்து. வருகிறேன் சட்டென ஒரு யோசனை, இவரை ஏன் ஒரு புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தோன்றியது. உடனே வண்டியை இடது பக்கம் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, வண்டிக்கு பூட்டு போட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு சாலையை கடந்தேன். புகைப்படம்  எடுப்பதை அவர் பார்த்து விட்டால் ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று தயங்கினேன். அதனால் பின் பக்கமாக இருந்து எடுக்கத் திட்டமிட்டேன். அவருக்குப் பின்னால் மூன்றடி இடைவெளி விட்டு பின்தொடர செய்ய ஆரம்பித்தேன். வேகமாக போனை அன்லாக் செய்து கேமராவை ஆன் செய்து பிரேமை வைத்தேன். அதே மூன்றடி  இடைவெளியுடன் அவரின் வேகத்திற்கு இணையாக நடந்துகொண்டே ஒரு படம் எடுத்தேன். எடுக்கும்போதே தெரிந்தது, படம் சிறப்பாக அமையவில்லை. அடுத்த படத்திற்கு முயற்சி செய்து கொண்டிருந்த​ நொடி அவர் பூம்புகார் துணியகத்தை கடந்துக்கொண்டு இருந்தார். அந்நேரம் கடையில் இருந்து  தாய்மார்கள் இருவர் வெளியே வந்துகொண்டு இருந்தனர். அவர்களில் ஒரு