Skip to main content

Posts

Showing posts from 2020

மொட்டை மாடி தீபாவளி!

  இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே தெருக்களில் "அகலு! அகலேய்....!" என  வியாபாரிகளின் கூக்குரல், கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி விட்டத்தை சொல்லும் அறிகுறிகளின் ஒன்று. பத்து நாட்கள் நடைபெறும் எங்கள் ஊர் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் மரத்தேரும், பத்தாம் நாள் தீபத் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஐந்தாம் திருவிழாவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும். முதல் திருவிழாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக திருவிழா கலைக் கட்ட ஆரம்பிக்கும். மரத்தேரின் போது திருவிழா அதன் உச்ச நிலையை​ தொட்டு இருக்கும். உள்ளூரில் இருந்து வெளியூர்களுக்கு சென்றவர்கள் தங்கள் சொந்த வீட்டிற்கும் அல்லது சொந்தங்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்திருப்பார்கள். ஒன்பதாம் திருவிழாவன்று பல ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதற்கான சிறப்பு பேருந்துகளை இயக்க ஆரம்பித்து இருப்பார்கள். விடுமுறை கிடைக்காத திருவண்ணாமலை வாசிகள் எப்படியாவது தீபத்தை மட்டுமாவது பார்த்து விடவேண்டும் என அடித்து பிடித்து ஊரை நோக்கி தங்களின் பயணத்தை தொடங்கி இருப்பார்கள். தொலைக்காட்சியில் எல்லா சேனலில்கள

வனமகனுக்கு காடோடி பரிசு!

நண்பர்களுக்கு திருமண பரிசாக எப்பொழுதும் புத்தகங்களை தருவதே வழக்கம். "எஸ்.ரா." அவர்களின் "காட்சிகளுக்கு அப்பால்" புத்தகத்தை மட்டும் பரிசாக பத்து நண்பர்களுக்கு மேல் கொடுத்து இருப்பேன். காரணம் அந்த புத்தகம் உலக சினிமாக்களை பற்றியது. சினிமா எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று, அதேபோல் எளிமையான புத்தகமும் கூட. இதனால் எளிதில் அனைவரும் வாசிக்க முயற்சி செய்வார்கள். அந்த புத்தகத்தின் சில பிரதிகளை புத்தக கண்காட்சிக்கு போகும்போதெல்லாம் வாங்கி வைத்துக் கொள்வேன். விலையும் பக்கங்களும் நூற்றுக்கு குறைவுதான்.  மற்ற எந்த பொருளை பரிசாக கொடுப்பதை காட்டிலும் புத்தங்களை தருவதில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. புத்தகங்களை பெற்றவர்கள் உடனே படிக்கவில்லை என்றாலும் அவர்கள் வீட்டிலேயே பத்திரமாக இருக்கும். இடத்தை அடைக்காது. பின்நாளில் அவர்களோ அல்லது வேறு யாராவதோ கூட வாசிக்கலாம். வாசிப்பு உலகத்திற்கு​ ஒரு புதிய வாசகர் கிடைப்பார். 29.10.2020 அன்று (நாளை) பள்ளி நண்பன் அரவிந்தின் திருமணம்​. மிக நெருக்கம் இல்லையென்றாலும் நீண்ட நாள் நண்பன். தமிழக வனத்துறையில் பணிபுரிகிறார். கையிருப்பில் இருக்கும் "காட்சி

Naveram - Short Story.

நவிரம் - சிறுகதை.       சீரான இடைவெளியில் மண்ணில் பாதி புதைந்திருந்த ரப்பர் டயர்களின் மீது மழலைகள் தாவியாடிக் கொண்டிருந்தார்கள். தொங்கும் கயிறு பாலம், மரப்பாலம், லாரி டயரினால் செய்யப்பட்ட குகை என பல வித்தியாசமான விளையாட்டுகளும்; ஊஞ்சல், சறுக்கு மரம், இரும்புக் கூண்டு, சீ-சா போன்ற வழக்கமான விளையாட்டுகளும் இருந்தது. பல வண்ணங்களில் தீட்டப்பட்டு இருந்த அனைத்து விளையாட்டுகளிலும், குழந்தைகள் ஆக்கிரமிப்பு செய்து இருந்தார்கள். அவர்களை தங்களின் கண் பார்வையிலேயே இருக்கும்படி பெற்றோர்கள் அருகிலேயே நின்று கவனித்துக் கொண்டார்கள். மழைநீர் சேகரிப்பு, மக்கும்-மக்காத குப்பை, டெங்கு ஒழிப்பு, நடைப் பயிற்சியின் பயன்கள், மனிதன் நிலவில் கால் பதித்த காட்சி, சூரியக் குடும்பம், கிரகணங்கள், மயில் வடிவில் இருக்கும் மாவட்டத்தின் வரைபடம் என பலப் படங்கள் பூங்காவின் சுற்று சுவர் முழுவதும் ஓவியமாக வரையப்பட்டு இருந்தது. ஆங்காங்கே போடப்பட்டு இருந்த சிமெண்ட் பெஞ்ச் அனைத்திலும் ஆட்கள் நிரம்பி இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பிள்ளைகளுடன் வந்தவர்களாகவும் சிலர் வேடிக்கை பார்த்து பொழுதை போக்க வந்தவர்களாகவும் இருந்தார்

POV - DIY Equipment for Mobile Phone

POV Bookshelf Tour: https://youtu.be/QL7as4WSp5I   Maruthanaayakam Khanshaib - POV Short Film: https://youtu.be/X9yG8VvxMJM Required Things: A Cap, Velcro stricker, Selfie stick, Metal String.

Story of the Photo 03: Samosa Men of Tiruvannamalai

சமோசா பாயும் பையாவும்      தேரடி வீதியில் TVS XLலில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது எனது வலது புறத்திற்கு எதிரே கொஞ்சம் தூரத்தில் இவர் வந்து கொண்டிருந்தார். சிறுவயதில் இருந்து பார்த்து. வருகிறேன் சட்டென ஒரு யோசனை, இவரை ஏன் ஒரு புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தோன்றியது. உடனே வண்டியை இடது பக்கம் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, வண்டிக்கு பூட்டு போட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு சாலையை கடந்தேன். புகைப்படம்  எடுப்பதை அவர் பார்த்து விட்டால் ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று தயங்கினேன். அதனால் பின் பக்கமாக இருந்து எடுக்கத் திட்டமிட்டேன். அவருக்குப் பின்னால் மூன்றடி இடைவெளி விட்டு பின்தொடர செய்ய ஆரம்பித்தேன். வேகமாக போனை அன்லாக் செய்து கேமராவை ஆன் செய்து பிரேமை வைத்தேன். அதே மூன்றடி  இடைவெளியுடன் அவரின் வேகத்திற்கு இணையாக நடந்துகொண்டே ஒரு படம் எடுத்தேன். எடுக்கும்போதே தெரிந்தது, படம் சிறப்பாக அமையவில்லை. அடுத்த படத்திற்கு முயற்சி செய்து கொண்டிருந்த​ நொடி அவர் பூம்புகார் துணியகத்தை கடந்துக்கொண்டு இருந்தார். அந்நேரம் கடையில் இருந்து  தாய்மார்கள் இருவர் வெளியே வந்துகொண்டு இருந்தனர். அவர்களில் ஒரு

Theatre Story: Richard Parker

நான் சந்தித்த "ரிச்சர்ட் பார்க்கர்"! "சூப்பர் டீலக்ஸ்" திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. பதினோராம் வகுப்பு படிக்கும் போது "ஆரணிய காண்டம்" படத்தை தனியாக சென்று பார்த்திருக்கிறேன். படத்தின் செய்தித்தாள் விளம்பரத்தில் தென்னங்கீற்று போல முத்திரை இருந்தது தான் ஒரே காரணம். என்னையும் சேர்த்து திரையரங்கில் மொத்தமே பத்து நபர்கள் தான் இருந்தார்கள். ரொம்பவும் வித்தியாசமான கேங்ஸ்டர் படம். பிடித்திருந்தது என்று சொல்வதைவிட புதுமையான அனுபவமாக இருந்தது எனச் சொல்லலாம். அந்த இயக்குனர் தன்னுடைய இரண்டாவது படத்தை பல வருட இடைவெளிக்குப் பிறகு எடுத்திருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்திற்கு "A" சான்றிதழ் கொடுத்து இருந்தார்கள். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தது. ஞாயிறு மதியம் 1:30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன். நடக்க ஆரம்பித்தால் பத்து நிமிடத்தில் திரையரங்கை அடைந்து விடலாம். முன்பதிவு செய்யவில்லை. சக்தி திரையரங்கில் மொத்தம் மூன்று திறைகள

Book Review: Kanavugalin Vilakam

கனவுகளின் விளக்கம் - சிக்மண்ட் பிராய்ட் 1) கனவு என்றால் என்ன? 2) ஏன் தூக்கத்தில் கனவு வருகிறது? 3) ஏன் விழித்தவுடன் கனவு மறந்து போகிறது? 4) கனவு பலிக்குமா? 5) கனவு என்பது கடவுளின் அருள் வாக்கா? 6) கனவில் எதிர்காலத்தை தெரிந்துக்கொள்ள முடியுமா? 7) பகல் கனவு என்றால் என்ன? 8) காதல் வயப்பட்டவர்களின் கனவில், அவர்கள் காதலிப்பவர்கள் வருவார்களா? 9) பாலுணர்ச்சி சம்பந்தமான கனவுகள் வருவது ஏன்? மேலும் இதுபோன்று கனவை பற்றிய கேள்விகளுக்கு இந்த புத்தகம்​ எளிமையாக விளக்கம் தருகிறது. அதுநாள்வரை கனவு என்பது மதம் அல்லது அசரீரி என்ற கோணத்திலே நம்பப்பட்டு வந்தது. அதற்கு விளக்கம் தரும் வகையில் "உளவியலின் தந்தை" என்று போற்றப்படும் மருத்துவரான 'சிக்மண்ட் பிராய்ட்' அவர்கள் 1899ல் வெளியிட்ட புத்தகம் தான் "The Interpretation of Dreams". அதன் தமிழ் சுருக்க வடிவமே இந்த "கனவுகளின் விளக்கம்". 'சிக்மன்ட் பிராய்ட்' அவர்கள் ஒரு நபரின் கனவை பதிவு செய்து, அந்த நபரின் கடந்த காலம், விருப்பு, வெறுப்பு என அனைத்தையும் அலசி ஆராய்ந்து அந்தக் கனவுக்கான விளக்கத்தை

Story of the Photo 02: School Memories

புகைப்படத்தின் கதை: துருப்பிடிக்காத நினைவுகள்! மதிப்பெண் சான்றிதழை வாங்குவதற்காக அனைவரும் ஒன்று கூடினோம். தினமும் 'யூனிபார்மில்' பார்த்தவர்களை அன்று 'அன்யூனிபார்மில்' பார்த்தது தனி மகிழ்ச்சி. மாணவிகள் பெரும்பாலானோர் தங்கள் பெற்றோர்களுடனே வந்திருந்தார்கள். வகுப்பு ஆசிரியரிடம் சான்றிதழ்களை வாங்கிவிட்டு, நட்பு வட்டாரத்துடன் பல கதைகளை பேசிக்கொண்டு இருந்தோம். பள்ளியில் இருந்து கல்லூரிக்கு போவதை எண்ணி ஆர்வமும், பள்ளி நண்பர்களை விட்டு பிரியப் போவதை எண்ணி ஏக்கமும் இரண்டறக் கலந்திருந்தது. அனைவரும் அலுவலக கட்டிடத்திற்கு அருகிலும் பள்ளி மைதானத்திலும் இருந்தார்கள். சிலர் உடனே வீட்டிற்கு கிளம்பிவிட்டார்கள், பலர் பள்ளியை விட்டு போக மனமில்லாமல் அங்கேயே சுற்றி சுற்றி வந்தனர். "பார்த்து ரொம்ப நாள் ஆச்சே, நமது வகுப்பறை எப்படி இருக்கிறது?" என யோசித்து தனியாக வகுப்பறையை நோக்கி நடந்தேன். பசங்க ஒருபுறமும் பொண்ணுங்க ஒருபுறமும் ஒதுங்கி நடந்த வரண்டாவில் இன்று என்னைத் தவிர யாரும் இல்லை. வகுப்பறை பூட்டப்பட்டிருந்தது. கடந்து வந்த பாதைக்கு வேலி போட்டது போல இருந்தது. ஆசைப்ப