Skip to main content

Posts

Showing posts from April, 2020

Book Review: Kanavugalin Vilakam

கனவுகளின் விளக்கம் - சிக்மண்ட் பிராய்ட் 1) கனவு என்றால் என்ன? 2) ஏன் தூக்கத்தில் கனவு வருகிறது? 3) ஏன் விழித்தவுடன் கனவு மறந்து போகிறது? 4) கனவு பலிக்குமா? 5) கனவு என்பது கடவுளின் அருள் வாக்கா? 6) கனவில் எதிர்காலத்தை தெரிந்துக்கொள்ள முடியுமா? 7) பகல் கனவு என்றால் என்ன? 8) காதல் வயப்பட்டவர்களின் கனவில், அவர்கள் காதலிப்பவர்கள் வருவார்களா? 9) பாலுணர்ச்சி சம்பந்தமான கனவுகள் வருவது ஏன்? மேலும் இதுபோன்று கனவை பற்றிய கேள்விகளுக்கு இந்த புத்தகம்​ எளிமையாக விளக்கம் தருகிறது. அதுநாள்வரை கனவு என்பது மதம் அல்லது அசரீரி என்ற கோணத்திலே நம்பப்பட்டு வந்தது. அதற்கு விளக்கம் தரும் வகையில் "உளவியலின் தந்தை" என்று போற்றப்படும் மருத்துவரான 'சிக்மண்ட் பிராய்ட்' அவர்கள் 1899ல் வெளியிட்ட புத்தகம் தான் "The Interpretation of Dreams". அதன் தமிழ் சுருக்க வடிவமே இந்த "கனவுகளின் விளக்கம்". 'சிக்மன்ட் பிராய்ட்' அவர்கள் ஒரு நபரின் கனவை பதிவு செய்து, அந்த நபரின் கடந்த காலம், விருப்பு, வெறுப்பு என அனைத்தையும் அலசி ஆராய்ந்து அந்தக் கனவுக்கான விளக்கத்தை

Story of the Photo 02: School Memories

புகைப்படத்தின் கதை: துருப்பிடிக்காத நினைவுகள்! மதிப்பெண் சான்றிதழை வாங்குவதற்காக அனைவரும் ஒன்று கூடினோம். தினமும் 'யூனிபார்மில்' பார்த்தவர்களை அன்று 'அன்யூனிபார்மில்' பார்த்தது தனி மகிழ்ச்சி. மாணவிகள் பெரும்பாலானோர் தங்கள் பெற்றோர்களுடனே வந்திருந்தார்கள். வகுப்பு ஆசிரியரிடம் சான்றிதழ்களை வாங்கிவிட்டு, நட்பு வட்டாரத்துடன் பல கதைகளை பேசிக்கொண்டு இருந்தோம். பள்ளியில் இருந்து கல்லூரிக்கு போவதை எண்ணி ஆர்வமும், பள்ளி நண்பர்களை விட்டு பிரியப் போவதை எண்ணி ஏக்கமும் இரண்டறக் கலந்திருந்தது. அனைவரும் அலுவலக கட்டிடத்திற்கு அருகிலும் பள்ளி மைதானத்திலும் இருந்தார்கள். சிலர் உடனே வீட்டிற்கு கிளம்பிவிட்டார்கள், பலர் பள்ளியை விட்டு போக மனமில்லாமல் அங்கேயே சுற்றி சுற்றி வந்தனர். "பார்த்து ரொம்ப நாள் ஆச்சே, நமது வகுப்பறை எப்படி இருக்கிறது?" என யோசித்து தனியாக வகுப்பறையை நோக்கி நடந்தேன். பசங்க ஒருபுறமும் பொண்ணுங்க ஒருபுறமும் ஒதுங்கி நடந்த வரண்டாவில் இன்று என்னைத் தவிர யாரும் இல்லை. வகுப்பறை பூட்டப்பட்டிருந்தது. கடந்து வந்த பாதைக்கு வேலி போட்டது போல இருந்தது. ஆசைப்ப

FDFS of Enthiran Movie

நாலு மணிக்கு எந்திரா! எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அன்று ரஜினிகாந்த் அவர்களின் "சிவாஜி" படம் வெளியாகி இருந்தது. திருவண்ணாமலையில் அனைத்து திரையரங்கிலும் ஒரே திரைப்படம் ஓடுவது அதுவே முதல் முறை. நிச்சயம் முதல் நாள் காட்சிக்கு வீட்டில் அழைத்து செல்ல மாட்டார்கள். காலையில் பள்ளிக்கு செல்லும் போது எங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் "புகழ் திரையரங்கை" ஏக்கத்துடனே கடந்து சென்றேன். எங்கள் வீட்டின் மாடியில் நின்றால் புகழ் திரையரங்கில் ஓடும் படத்தின் ஒலியை தெளிவாக கேட்க முடியும். அன்று மாலை பள்ளி மற்றும் tuitionயை முடித்துவிட்டு வீட்டின் மாடியில் நின்று படத்தின் சப்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தேன். அனைத்து பாடல்களையும் ஏற்கனவே பாட்டு புத்தகத்தை வாங்கி மனப்பாடம் செய்து இருந்தேன். படத்தில் எந்த பாடல் எப்பொழுது வருகிறது என்பதையும் வசனங்களையும் கேட்டுக்கொண்டே அன்றைய பொழுதையும் ஏக்கத்தையும் கழித்தேன். மறுநாளும் பள்ளி இருந்ததால், அன்று மாலை ஆறு மணி காட்சிக்கே வீட்டில் அழைத்துச் சென்றார்கள். நான் ரஜினி ரசிகன் ஆவதற்கு "சிவாஜி" படமே அடித்த